Monday 4 December 2017

"இண்டீரியர் பற்றி பேசுவோம் " - சாளரங்களை (WINDOWS) நம் தேவை மற்றும் பாதுகாப்பை பூர்த்தி செய்யும் வகையில் தேர்ந்தெடுக்கிறோமா?

இனறைக்கு நான் எழுத நினைக்கும் தலைப்பு வீட்டிற்கு முக்கியமான சாளரங்கள் (WINDOWS) பற்றியது. ஆம் வீடு கட்ட பிளான் போடும்போது இதை பற்றிய எண்ணம் நம் சிந்தனையில் கொள்வது அவசியம். ஏனேனில் நகரமயமாக்கல் காரணமாக பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை வணிக ரீதியில் கட்ட தொடங்கியிருப்பதால் காற்றை வீட்டிற்குள் கொண்டுவருவதென்பது பெரிய சுமையாக போய்விட்டது. இதை சமாளிக்கும் விதமாக சாளரங்களின் பயன்பாடுகளை பெரிய அளவில் நம்ப வேண்டியுள்ளது ஆம் எத்தனை சாளரங்களை கட்டத்தில் வடிவமைப்பது முதல் தொடங்கி எந்த இடத்தில பொருத்துவது மற்றும் எந்த சாளரங்களை  தெரிந்தெடுப்பது என அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல் படுவது மிகவும் அத்தியாவசியமாகிறது. இதில் நான் சொன்ன மூன்றாவது விசயத்தை பற்றி பேசுவது இன்றைய சூழ்நிலைக்கு பொறுத்தமானதாய் அமையும்,


ஆம் இன்றைய சூழ்நிலையில் யூபிவிசி சாளரங்கள் (UPVC WINDOWS) பங்களிப்பு அத்திவாசியமாகிறது, ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான காற்றுடன் கூடிய கனமழை , புயல் மற்றும் சூறாவளியுடன் கூடிய கனமழை இவைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. இத்தகைய கனமழையின் காரணமாக நம் வீட்டு சாளரங்கள் இவை அனைத்தினாலும் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மையும் வீட்டின் பொருட்களையும் பாதுகாக்குமா? எனும் கேள்வி மேலோங்கி நிற்கத்தான் செய்கிறது.



 நாம் பயன்படுத்தும் மர மற்றும் அலுமினிய சாளரங்கள் நமக்கு வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்கிறதா என்று கேள்வி எழுப்பினால் நாம் நம் கைகளை பிசையும் நிலையிலே இருந்து கொண்டு இருந்தோம் ஆனால் இனி அப்படியான நிலை நமக்கு தேவை இல்லை ஆம் இன்றைய தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றதான யூபிவிசி சாளரங்களை நாம் பயன்படுத்த தயாராக வேண்டும். இந்த சாளரங்களின் வடிவமைப்பு அவ்வாறாக உள்ளது. என்பதுதான் இதன் சிறப்பு இவை மழையில் கடினமாய் வந்து விழும் சாரல் மழையின் நீரை தன்னகத்தே கொள்ளாமல் வெளியேற்றும் இயல்பை பெற்றுள்ளது இதில் நீரை வெளியேற்றும் துளைகள் ஆங்காங்கே உள்ளதால் இவை இயல்பாகவே எப்படியான நீரையும் வெளியேற்றி நீர் வீட்டினுள் வராமல் தடுக்கிறது மற்றும் மழை காலங்களில் ஏற்படும் கதவுகள் அடைக்காமல் போகும் தன்மை இவவமைப்பில் இல்லை. தரமான மற்றும் நேர்த்தியான முறையில் செய்ய்ய்யப்பட்ட இவற்றின் வடிவமைப்பு பார்ப்பதற்கு அழகாகவும் அதே நேரத்தில் பராமரிப்பு அற்றதாகவே உள்ளது

இவற்றிற்கு வண்ணம் பூசவோ பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவோ வேண்டிய அவசியம் இல்லை மற்றும் இது தீ பிடித்தல் எரியாமல் கருகும் தன்மை மட்டுமே கொண்டது அதுவும் கடிமான நெருப்பை இவற்றின் மீது பிரயோகித்தல் மட்டுமே இவை கருகும்.

இவைகளின் பொருத்துதல் பணியின் போதே சுவர்களுக்கு சாளரங்களுக்குமான இடைவெளி முழுவதுமாக சிலிக்கான் எனும் கூழ்மத்தை கொண்டு அடைத்தி நேர்த்தியான முறையில் பொறுத்தப்படுவதால் இவை பார்ப்பதற்கு சுவற்றின் வண்ணத்தோடு இணைந்து மேலும் அழகூட்டுகிறது. இவைகள் இயற்கையாகவே வெண்மை நிறத்தை கொண்டிருப்பதால் சுவரின் வண்ணங்களுக்கு  ஏற்ப இயல்பாய் பொருந்துகிறது. இப்பொழுது பிரத்யேக முறையில் மரங்களின்  நிறங்களை போன்ற நிறம் கொண்ட சாளரங்களையும் இப்பொழுது நம் தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடுயும்.

தயாரிப்பு முறை மிகவும் எளிது என்பதால் பெரிய அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்ப சாளரங்களை குறித்த நேரத்தில் பெற்று பணிகளை விரைந்து முடிக்க பேருதவியாக இருக்கிறது மேலும் நிலையான அளவுகளில் சாளரங்கள் வேண்டும் என்றால் இன்னும் விரைந்து பெற்று பணிகளை முடிக்கமுடியும் ஏனேனில் ஒவ்வொரு சாளரங்களையும் அளந்து எடுத்து உற்பத்தி செய்யும் முறையை விட ஸ்டாண்டர்ட் அளவுகளில் உற்பத்தி செய்வது நேரம் மற்றும் பணவிரயத்தை குறைக்கும் மேலும் இம்மாதிரியன முறையில் சாளரங்களை கட்டட பணிகளை முடிக்கும் முன்னரே சாளரங்களை பெற்று கட்டுதல் பணி முடியும் தருவாய்யை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் முடிக்கலாம்.


 இந்த சாளரங்களின் பயன்பாடு வடிவமைப்பு , மற்றும் இவற்றை நேராக காணவேண்டிய தேவை மற்றும் ஆர்டர் செய்ய வேண்டி இருப்பின் , தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9144-27465600 / 919677230594